பரபரப்பாக நடைபெறும் சிறிலங்கா அதிபருக்கான தேர்தல்! வெளியே வந்தார் மகிந்த
சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.
சிறிலங்காவின் இடைக்கால அதிபர் தேர்தல் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. இதில் வாக்களிப்பதற்காக அவர் நாடாளுமன்றம் வந்திருந்தார்.
கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகியிருந்தார். அத்துடன் அவர் தலைமறைவாகியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
வாக்கெடுப்பில் மகிந்த
எனினும், அடுத்து வந்த நாடாளுமன்ற அமர்வின் போது அவர் சமூகமளித்திருந்தாலும் சற்று நேரத்தில் வெளியேறியிருந்தார். இதற்கிடையில், கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியிருந்த நிலையில், நாட்டில் அதிபர் பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.
அத்துடன், ராஜபக்சக்களின் அரசியல் இருப்பு முற்றாக அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே இன்றைய வாக்கெடுப்பில் மகிந்த ராஜபக்ச கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.