நிபந்தனையற்ற ஆதரவுக்குத் தயார்- மைத்திரி பகிரங்க அறிவிப்பு!
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சர்வகட்சி அரசாங்கம் உருவாகும் பட்சத்தில் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என முன்னாள் அரச தலைவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
பொருளாதார நெருக்கடி
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளினதும், நாணய அமைப்புகளினதும் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்திற்கு மட்டுமே உதவி
நாம் சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட போது, நாட்டில் சர்வ கட்சியொன்றை உருவாக்கினால் மாத்திரமே தாங்கள் உதவிகளை வழங்குவதாக சர்வதேச நாடுகள் தெரிவித்தாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நாட்டில் சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதற்காக சுதந்திரக்கட்சி முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.