திருமணமான பெண்ணுடன் தொடர்பு - கணவனின் மூர்க்கத்தால் கொல்லப்பட்ட நபர்
இரத்தினபுரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹிதெல்லன பிரதேசத்தில் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று(12) இடம்பெற்ற இச்சம்பவத்தில் 24 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் குருவிட்ட பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகள் மூலம் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
சந்தேக நபர் கைது

காவல்துறையினருக்கு கிடைத்த அவசர அழைப்பினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது குறித்த நபர் தாக்கப்பட்டு மரமொன்றில் கட்டிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதன்போது அவசர நோயாளர் காவுவண்டி தொலைபேசி இலக்கத்திற்கு(1990) அழைப்பை மேற்கொண்டு காவல்துறையினர் குறித்தநபரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் சிகிச்சை பலனில்லாத காரணத்தினால் குறித்தநபர் உயிரிழந்துக்கதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர் திருமணமான பெண்ணொருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அவரின் கணவரினாலே இவர் தாக்கப்பட்டதாகவும் காவல்துறை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.