வாயாடல்கள் வேண்டாம் - முடிந்தால் வேலையை செய்து காட்டுங்கள்..! சஜித் பகிரங்க சவால்
சில கட்சிகளுக்கு சஜித் பீதி ஏற்பட்டுள்ளதாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் சில அரசியல் கட்சிகளின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளமையே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அண்மைய தினமொன்றில் தபுத்தேகம தேசிய பாடசாலைக்கு பேருந்து வழங்கப்பட்ட போது, அந்த பாடசாலையின் பழைய மாணவரான, கட்சித் தலைவர் ஒருவர் கின்டலடிக்கும் விதமாக பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹோமாகம மகா வித்தியாலயத்திற்கு பேருந்து வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தம்பட்டம் அடிக்கும் வி.வி.ஐ.பி சோசலிஸ்டுகளிடம் பொய்யான வாயாடல்களை ஒதுக்கி வைத்துவிட்டு முடிந்தால் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய வாருமாறும், அவ்வாறு இல்லாமல் பொய்யான வாயாடல்கள் மற்றும் கின்டல் பேச்சுக்களைக் கூறி இந்த பேருந்து வழங்கும் திட்டத்தை நிறுத்த முடியாது எனவும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
மருத்துவ உபகரணங்களை கொடுப்பது..
நமது நாட்டின் பிள்ளைகளை பகடைக்காயாக பயன்படுத்தும் தேசமாக மாற்றுவதற்கான திட்டங்களைத் தயாரிக்கும் வி ஐ பி சோசலிஸ்டுகள், கூட்டங்களைக் கூட்டி எவ்வாறேனும் சஜித்தை தோற்கடிப்பதாக கூறிவருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
பாடசாலைகளுக்கு பேருந்து வழங்குவதும் மருத்துவமனைகளுக்கு மருந்து உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கொடுப்பது என்பதும் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டல்லாது சமூகக் கடமை மற்றும் சமூக நலனை கருதியே அன்பளிப்புச் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதி என்கின்ற போது தோற்றத்திலோ,பேச்சிலோ மட்டுமின்றி, நடைமுறையிலும் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும் எனவும்,மக்கள் தாம் நியமிக்கும் தலைவர்களின் கொள்கைகளை அவதானித்து வருவதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வட கொரியா மற்றும் கியூபாவுடன் மாத்திரம் தொடர்புகளைப் பேணுவதால் இந்நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
