நீண்ட இழுபறியின் பின்னர் முற்றுப்பெற்ற பதவி விலகல் - வெளியானது வர்த்தமானி
Gotabaya Rajapaksa
Sri Lanka
President of Sri lanka
New Gazette
By Kalaimathy
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதாக உறுதிப்படுத்தப்பட்ட வர்த்தமானி தற்போது வெளியாகியுள்ளது.
அதற்கமைய கோட்டாபய ராஜபக்ச ஜூலை 14ஆம் திகதி முதல் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்து அனுப்பிவைத்துள்ள பதவி விலகல் கடிதம் சபாநாயகருக்கு கிடைத்ததை உறுதி செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைஙய தினம் மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் சென்ற கோட்டாபய அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்திருந்தார்.
அவர் உத்தியோகபூர்வமாக பதவி விலகியதை இன்று காலை செய்தியாளர் சந்திப்பின் மூலம் சபாநாயகர் உறுதிப்படுத்தியிருந்தார்.
இதனையடுத்தே அவரின் பதவி விலகல் கடிதம் தொடர்பான வர்தமானி தற்போது வெளியாகியுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி