ரணில் என்பவர் ஊழல்கள் நிறைந்த ராஜபக்சகளின் நகலே - உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் வெளிப்படை!
சிறிலங்காவின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்க ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்க வேண்டிய இடத்தில் உள்ளார் என அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு பொருளாதார பேராசிரியரான உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
அவரது பதிவில் தொடர்ந்தும் தெரிவித்திருப்பதாவது,
1977ஆம் ஆண்டு முதல் ரணில் விக்ரமசிங்க ஆறு முறை சிறிலங்காவின் பிரதமராக பதவி வகித்து ஊழல்கள் நிறைந்த ராஜபக்சகளை காப்பாற்றியதாகவும் சுட்டிக்காட்டியள்ளார்.
ரணில் என்பவர் ராஜபக்சகளின் நகல் என்பதனை தவிர வேறு ஒன்றுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் சொத்துக்களை கணக்காய்வு செய்ய வேண்டிய தருணம் இது எனவும் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
New Pres. Wickremesinghe should be on the hot-seat for corruption allegations. Since 1977, Wickremesinghe has been Sri Lanka's PM SIX times & protected the corrupt Rajapaksas. Wickremesinghe is nothing but a Rajapaksa clone. Time to audit his assets. https://t.co/ZaZ3brZobn
— Steve Hanke (@steve_hanke) July 21, 2022