நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் - விடியவிடிய காட்டுக்குள் நடந்த யாகம்!
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முக்கியஸ்தர் ஒருவர் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக காட்டுக் கோவில் ஒன்றில் விசேட யாக பூஜை ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த ஒருவரே இந்த யாகத்திற்கான முழு செலவுகளையும் பங்களிப்பையும் வழங்கியுள்ளார்.
முன்னாள் அமைச்சரின் ஏற்பாட்டில் யாகம்
இவர் இலங்கையின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மொனராகலை சியம்பலாவ கெபலித்த காட்டில் உள்ள முருகன் கோயிலில் கடந்த 16 ஆம் திகதி இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளது. அதிகாலை ஒரு மணிக்கு ஆரம்பமான யாகபூஜை அதிகாலை 5 மணி வரை நடத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றிற்குள் தேர்தல்
எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்திற்குள் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் முக்கியஸ்தர் ஒருவரின் வெற்றிக்கு ஆசி வேண்டியே, இந்த சிறப்பு யாகம் நடத்தப்பட்டுள்ளது.