பொதுஜன பெரமுனவிற்குள் வகையாக சிக்கியுள்ள ரணில் - கைப்பாவையாகும் ஆபத்தில்!

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Podujana Peramuna President of Sri lanka
By Kalaimathy Aug 19, 2022 08:50 AM GMT
Report

ரணில் விக்ரமசிங்கவை அதிபர் பதவிக்கு தெரிவு செய்தது தமது கட்சி என்பதால், அவர் தமது கட்சிக்கு தேவையான வகையில் செயற்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் தெரிவு செய்த அதிபர் எமக்கு தேவையான வகையில் நடந்துகொள்ள வேண்டும். அதில் இருக்கும் தவறு என்ன? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“ஐக்கிய மக்கள் சக்தியினர் டலஸ் அழகப்பெருமவை அதிபராக தெரிவு செய்ய முயற்சித்தனர். ஆனால் அது முடியாமல் போயுள்ளது.

நாளை தேர்தல் நடந்தாலும் எமக்கே வெற்றி

பொதுஜன பெரமுனவிற்குள் வகையாக சிக்கியுள்ள ரணில் -  கைப்பாவையாகும் ஆபத்தில்! | Sri Lanka President Ranil Podujana Peramuna Gota

எனவே பொதுஜன பெரமுனவுக்கே இன்னும் மக்கள் ஆணை இருக்கின்றது என்ற பலத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் காண்பித்துள்ளோம். நாளைய தினம் தேர்தலுக்கு சென்றாலும் அந்த பலத்தை நாங்கள் காட்டுவோம்.

மக்கள் அதனை செய்து காட்டுவார்கள். மகிந்த ராஜபக்ச பதவி விலகிய பின்னர், கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் பதவியை ஏற்குமாறு சிலருக்கு அழைப்பு விடுத்தார்.

சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்த போது, அதிபர் பதவி விலகும் தினத்தை அறிவிக்குமாறு கூறினார். சரத் பொன்சேகாவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் போது நான் அதிபர் மாளிகைக்குள் இருந்தேன்.

எந்த பேரம் பேசலும் இல்லாமல் பதவியை ஏற்ற ரணில்

பொதுஜன பெரமுனவிற்குள் வகையாக சிக்கியுள்ள ரணில் -  கைப்பாவையாகும் ஆபத்தில்! | Sri Lanka President Ranil Podujana Peramuna Gota

சரத் பொன்சேகா, சமூக வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பில் அச்சத்தில் இருந்தார். சமூக ஊடகங்களில் என்ன கூறுகிறார்கள் என்பதை அறிய தனக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்குமாறு சரத் பொன்சேகா கோரியிருந்தார்.

அதன் பின்னர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்ட போது, நீங்கள் விலகி, அரசாங்கத்தை ஒப்படைத்தால் ஏற்றுக்கொள்கிறேன் என கோட்டாபயவிடம் கூறினார். நாட்டை பொறுப்பேற்க எவரும் இல்லாத நேரத்தில் ரணில் விக்ரமசிங்க அதனை ஏற்றுக்கொண்டார்.

நான் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவன் அல்ல. அவர் நான் நேசிக்கும் பாத்திரமும் அல்ல. ஆனால் நாடு கஷ்டத்தில் விழுந்திருந்த சந்தர்ப்பத்தில், தோளில் சுமந்தவர் என்ற வகையில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.

ஏனையவர்கள் ஒதுங்கி செல்லும் போது, ஏழு முறை நாட்டின் பிரதமராக பதவி வகித்த அனுபவமிக்க தலைவரான ரணில் விக்ரமசிங்க எந்த நிபந்தனையும் இன்றி ஏற்றுக்கொண்டார்.

அனைத்து கட்சிகளுக்கும் ரணில் விடுத்துள்ள அழைப்பு

பொதுஜன பெரமுனவிற்குள் வகையாக சிக்கியுள்ள ரணில் -  கைப்பாவையாகும் ஆபத்தில்! | Sri Lanka President Ranil Podujana Peramuna Gota

கொவிட் தொற்று நோய் பரவிய நேரத்தில் அலரி மாளிகையில் சர்வக்கட்சி கூட்டம் கூட்டப்பட்ட போது, ஏனைய கட்சிகளுக்கும் அதில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்த போது, அங்குமிங்கும் கலந்துரையாட முடியாது நாடாளுமன்றத்தை கூட்டுங்கள் என்று அந்த கட்சிகள் கூறின.

ஆனால், ரணில் விக்ரமசிங்க அந்த இடத்திற்கு வந்தார். அமர்ந்து பேசி முடிவை எடுப்போம், தொற்று நோய்க்கு மத்தியில் அரசியல் செய்ய முடியாது, அது முடிவுக்கு வந்த பின்னர் அரசியல் செயற்பாடுகளுக்கு திரும்பலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர் ரணில் விக்ரமசிங்க.

பிரதமர் பதவியை ஏற்குமாறு கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்த போது எந்த நிபந்தனையும் இன்றி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே ஏற்றுக்கொண்டார்.

அது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க மீது மரியாதை இருக்கின்றது. அத்துடன் எந்த நிபந்தனையும் இன்றி தற்போது நாட்டை பொறுப்பேற்றுள்ளார். அனைவரும் ஒன்றாக அமர்ந்து பணியாற்றுவோம் என அனைத்து கட்சிகளுக்கும் தற்போது அழைப்பு விடுத்துள்ளார்” எனவும் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

பிரச்சினையை எதிர்கொள்ள முடியாத கோட்டாபய பதவி விலகியதே சிறிந்தது

பொதுஜன பெரமுனவிற்குள் வகையாக சிக்கியுள்ள ரணில் -  கைப்பாவையாகும் ஆபத்தில்! | Sri Lanka President Ranil Podujana Peramuna Gota

அதேவேளை கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி சென்றமை தொடர்பில் எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள சனத் நிஷாந்த,   

“நாட்டில் உருவாகியுள்ள பிரச்சினையை எதிர்கொள்ள முடியாது என்றால் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி செல்வதே சிறந்தது.

இது கட்சியின் நிலைப்பாடு அல்ல எனது தனிப்பட்ட நிலைப்பாடு. துப்பாக்கியால் சுட முடியாத நபரிடம் பல்குழல் துப்பாக்கி இருந்தும் பயனில்லை. நன்றாக துப்பாக்கி பிரயோகம் செய்யக் கூடிய நபரிடம் ஒற்றை குழல் துப்பாக்கி இருந்தாலும் அவர் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வார்.

நாட்டில் இதனை விட மிகப் பெரிய கிளர்ச்சிகள் ஏற்பட்டன. கோட்டாபய கிளர்ச்சியை எதிர்கொண்டிருக்க வேண்டும். கோட்டாபய ராஜபக்சர்கள் போல் அதனை எதிர்கொள்ளவில்லை.

இதனை விட மோசமான யுத்தம் நடைபெற்ற போது மகிந்த ராஜபக்ச அதனை எதிர்கொண்டார். இதனால், கோட்டாபய பதவி விலகி சென்றமை சிறந்தது என்பதே எனது நிலைப்பாடு” எனவும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024