தொடர் நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவிக்கும் அரசாங்கம்- எச்சரிக்கை விடுத்துள்ள அரச நிறுவனங்கள்!

sri lanka mahinda protest government gotabaya
By Kalaimathy Apr 06, 2022 05:11 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து அரச ஊழியர்களும் பங்கேற்கும் பாரிய வேலைநிறுத்தம் ஒன்றை முன்னெடுப்பது குறித்து அரச துறையில் உள்ள தொழிற்சங்கங்கள் தற்போது கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் இராஜினாமாவை பிரதான கோரிக்கையாக முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அது மட்டுமன்றி, பதவி விலகளுக்கு மேலதிகமாக, வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மேற்படி வேலைநிறுத்தம் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னணி பொதுச் சேவை தொழிற்சங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய நெருக்கடிக்கு அரசியல் அதிகாரிகள் தீர்வுகாணத் தவறியதற்கு எதிராக, பல கட்டங்களாகப் போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, மூன்றாம் கட்டமாக நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நெருக்கடி நிலைமைக்கு அரசாங்கம் விரைவான தீர்வை வழங்குமாறு கோரி அனைத்து அரச ஊழியர்களும் இன்று பிற்பகல் உணவு இடைவேளையின் போது மௌனப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சங்கம் (SLGOTUA) அறிவித்துள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியில் 247,000 ஆசிரியர்களும் 16,000 அதிபர்களும் இணைந்து நேற்றைய தினம் அனைத்து வலயக் கல்வி அலுவலகங்களுக்கு முன்பாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவற்றைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அண்மைக்காலமாக இந்தப் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அரச தலைவர் மற்றும் அரசாங்கம் பதவி விலகக் கோரி நாடளாவிய ரீதியில் தற்போது போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, 600,000 அரச உத்தியோகத்தர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சங்கம், அரச நிறுவனங்களில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்காவிடின் எதிர்காலத்தில் கடமைகளில் இருந்து விலக நேரிடும் என அண்மையில் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016