அரசாங்கத்திற்கு இம்முறை ஜெனிவாவில் பாரிய நெருக்கடி ஏற்படும்! ஜி.எல் பீரிஸ் எச்சரிக்கை
அவசரகால சட்டம், ஜனநாயக உரிமை மீறல்கள், குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரின் போது விசேட கவனம் செலுத்தப்படும்.
கொள்கைக்கும், கட்சியின் அரசியலமைப்பிற்கு முரணாகவே சிறிலங்கா பொதுஜன பெரமுன தற்போது செயற்படுகிறது என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு அவசரகால சட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் அதற்கு எதிராக வாக்களித்தேன். தற்போதைய நிலையில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை கிடையாது.அவசரகால சட்டம் மனித உரிமைகளை கேள்விக்குள்ளாக்கும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,