முடக்கப்படுமா நாடு - தென்னிலங்கை நோக்கி படையெடுக்கும் மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புகள்!
Colombo
Gotabaya Rajapaksa
Sri Lanka
SL Protest
Inter University Students Federation
By Kalaimathy
கொழும்பில் இன்று, நாளையும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக, நாட்டை முடக்குவதற்குரிய நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரிய முற்றுகைப் போராட்டம்
அரச தலைவர் உட்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக இன்றும், நாளையும் கொழும்பை முற்றுகையிட்டு பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதால் பல்கலைக்கழக மாணவர்கள், எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இன்று கொழும்பை நோக்கி வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டை முடக்கும் திட்டம்
இந்தநிலையில் குறித்த போராட்டங்கள் மோசமடையுமாக இருந்தால் நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரண அறிவித்தல்