கொழும்பில் நேற்று பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்! குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வெளியிட்ட தகவல்
கைது
கோட்டா கோ கமவின் செயற்பாட்டாளரான அந்தோனி வெரங்கபுஷ்பிகா கொழும்பு தெற்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்வதற்கு முன்னதாக காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த அவரை, கோட்டை பகுதியில் வைத்து, நீல நிற வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத குழுவினரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், அவர் கடத்தப்பட்ட செய்தியில் உண்மையில்லை என கொழும்பு தெற்கு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாகவும், அவர் கோட்டை காவல்துறையினரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வின் கொழும்பு தெற்கு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,