சிறிலங்கா பாதுகாப்பு தரப்பினர் மனித உரிமைகளை மதித்துச் செயற்பட வேண்டும் - உன்னிப்பாக அவதானிக்கும் ஐ.நா!
இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாக ஐ.நா.பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் மோதலின் அடிப்படைக் காரணங்கள் மற்றும் போராட்டக்காரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றும் இட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
அமைதியான மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான சமரச மனப்பான்மையை ஏற்றுக்கொள்ளுமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
உன்னிப்பாக அவதானிக்கும் ஐ.நா செயலாளர்
இலங்கையில் வன்முறைகளைத் தவிர்த்து அமைதியான முறையில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறேன். மோதலுக்கான அடிப்படைக் காரணங்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வது முக்கியமானதாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இராணுவம் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் மனித உரிமைகளை மதித்துச் செயற்பட வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
I continue to follow the situation in Sri Lanka very closely. It is important that the root causes of the conflict and protestors’ grievances are addressed. I urge all party leaders to embrace the spirit of compromise for a peaceful and democratic transition.
— António Guterres (@antonioguterres) July 14, 2022