தமிழர்களை ஒடுக்கும் PTA...! ராப் பாடகர் சங்கீர்த்ஷன் கைதுக்குப் பின்னால் இருக்கும் அரசியல்
இலங்கையில் 1979 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA), இன்றுவரை சிவில் சமூகத்தினர், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் சிறுபான்மையினரை ஒடுக்குவதற்குக் கையாளப்படும் ஒரு பிரதான ஆயுதமாகத் தொடர்ந்து நீடிக்கிறது.
இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் முறையான நீதிமன்ற விசாரணையின்றி பல மாதங்கள் தடுத்து வைக்கப்படுவதுடன் அவர்களுக்குப் பிணை பெறுவதும் மிகக் கடினமான ஒன்றாகக் காணப்படுகிறது.
சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச சமூகமும் இச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறு இலங்கைக்குத் தொடர் அழுத்தங்களை வழங்கி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாகத்தான் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட ராப் பாடகரான சங்கீர்ஷனின் விவகாரம் தமிழ் மக்கள் மத்தியிலும் சர்வதேச அளவிலும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியிருந்தது.
இது குறித்தும் அண்மைய அரசியல் களம் குறித்தும் சிரேஷ்ட ஊடகவியலாளர் கஜமுகன் ஐயாத்துரை தெரிவித்த கருத்துகளுடன் வருகின்றது லங்காசிறியின் 'நேருக்கு நேர்' நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |