இலங்கை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம்!
police
sri lanka
death
investigation
body
puttalam
kalpitty
By Kalaimathy
கல்பிட்டி கடற்கரையில் மனித சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை கரையொதிங்கிய சடலம் சுமார் 5 அடி உயரம் எனவும் தலை மணலில் புதையுண்ட நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புத்தளம் கல்பிட்டி கந்தகுளி குடா கடற்கரையில் ஆணா அல்லது பெண்ணா என்று அடையாளம் காண முடியாது பழுதடைந்த நிலையில் சடலம் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலத்தின் தோல் மற்றும் சதை என்பன கரைந்துள்ளதால், சடலம் ஆணுடையதா அல்லது பெண்ணுடையதா என்பதை பரிசோதனை செய்யாது கூற முடியாது என கல்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதுடன் கல்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி