ரணிலின் நியமனத்திற்கு எதிரான மனு - நீதிமன்று வழங்கிய தீர்ப்பு!
பொதுத் தேர்தலில் போதிய வாக்குகளைப் பெறத் தவறிய ஒருவர், அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் பிரகாரம் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க முடியாது என சுட்டிக்காட்டி சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு ரணில் விரமசிங்கவுக்கு எதிராக மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி செல்லாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
ரணிலின் வழக்கு தொடர்பான தீர்ப்பு
நாகாநந்த கொடிதுவக்கினால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என நேற்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன, ஜனக் டி சில்வா ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த மனு நிராகரிக்கப்பட்டது.
இது தொடர்பில் சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு தெரிவிக்கையில்,
தேசிய பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்பிக்க வேண்டியது சட்டரீதியான தேவை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
ரணிலின் நியமனம் சட்ட விரோதமானது
இருப்பினும் 2020 பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு பல மாதங்களுக்குப் பின்னரே ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக ரணில் விக்ரமசிங்கவை நியமித்தமை அரசியலமைப்பை மீறும் செயலாகும் என்றும் அதன்பிரகாரம் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பதில் அதிபராகவும் நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.