எரிபொருள் விலையேற்றத்தால் விவசாயத் துறைக்கு பேரிடி: முடங்கும் காய்கறி வர்த்தகம்
அண்மைக்கால எரிபொருள் விலை உயர்வு விவசாயத் துறையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை விவசாயச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கெப்பட்டிபொல (Keppetipola) காய்கறி வர்த்தகர்கள் இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அதிகரிக்கும் செலவுகள்
மேலும் தெரிவித்த அவர்கள், காய்கறி இருப்புகளைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக எதிர்காலத்தில் மலையகக் காய்கறி வர்த்தகம் முழுமையாக முடங்கும் அபாயம் உள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதேவேளை அரிசி விலையை அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒன்று என அரிசி உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வு உற்பத்தி மற்றும் விநியோகச் செயல்முறைகள் இரண்டிலும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதன் விளைவாக ஒரு கிலோகிராம் அரிசியின் விலையைப் பத்து ரூபாய்க்கும் அதிகமான தொகையினால் அதிகரிக்க வேண்டியிருக்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |