ரஷ்யாவின் விமானம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்!
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுத்துவைக்கப்பட்டுள்ள ரஷ்ய எரோஃப்ளொட் விமானம் தொடர்பில் சட்டமா அதிபர் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளார்.
இன்றைய தினம் மனுவொன்றின் மூலம் இந்த சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
191 பயணிகள் மற்றும் 32 பணிக்குழாமினருடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை கடந்த இரண்டாம் திகதி வந்தடைந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குறித்த விமானம் தடுத்து வைக்கப்பட்டது.
குத்தகை பிரச்சினை
இவ்வாறான நிலையில், குத்தகை பிரச்சினை காரணமாக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள விமானத்தில் நாட்டுக்கு வந்த பயணிகள் வேறு விமானங்கள் ஊடாக ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சினை காரணமாக, சிறிலங்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான வணிக விமான சேவைகளை ரஷ்ய எரோஃப்ளொட் நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.