இலங்கையின் 74 வது ஆணழகன் போட்டி - முதல் 5 இடங்களில் இரு தமிழர்கள் ; மன்னாரில் கெளரவிப்பு!
Mannar
Sri Lanka
By Pakirathan
இலங்கையின் 74 வது ஆணழகன் போட்டி அண்மையில் நடைபெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு 3ம்,4ம் இடங்களை பெற்ற மன்னார் மாவட்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (7) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில், 3 ஆம் இடத்தை பெற்ற ஜெஸ்லின் மற்றும் 4 ஆம் இடத்தைப் பெற்ற ஜான்சன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
கெளரவிப்பு
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலினால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் மற்றும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் மற்றும் மாவட்ட செயலக பணியாளர்களும் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.



மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி