ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை அதிகரித்த மத்திய வங்கி
ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் 8.75 சதவீதமாக அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (25) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் நிலவும் நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் குறித்து உன்னிப்பாக பரிசீலித்த பின்னரே நாணயக் கொள்கைச் சபை இந்த முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்வு
இதேவேளை இவ்வருடம் மார்ச் மாதத்தில் ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 7.75 சதவீதமாகப் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்திருந்தது.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்கள் உலகளாவிய எண்ணெய் விலைகளை உயர்வாக வைத்திருப்பதுடன் இது இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்களைப் பாதித்துள்ளது.
இந்த உயர் எண்ணெய் விலைகள் காரணமாக, எரிபொருள் மற்றும் மின்சாரம் போன்ற உள்ளூர் எரிசக்தி விலைகளை அரசாங்கம் கடுமையாக உயர்த்த வேண்டியிருந்தது.
இதுவே, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் 2026ல் பணவீக்கம் 5.4 சதவீதமாக உயர்ந்ததற்கு ஒரு முக்கிய காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |