இலங்கையின் டிஜிட்டல் அடையாள அட்டைத்திட்டம் தயார் : இந்திய உயர்ஸ்தானிகர் அறிவிப்பு
இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்படத் தயாராக உள்ளதாகவும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்திற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு முன்னர் இன்னும் சில சிறிய நடைமுறைகள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற 'திஷா வழிகாட்டல் திட்டம் 2026' ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
டிஜிட்டல் அரச சேவைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு குடிமகனுக்கும் சரிபார்க்கப்பட்ட, நம்பகமான டிஜிட்டல் அடையாளம் கிடைக்கும் போது, நாட்டின் அடிப்படை அமைப்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். சமூக உள்ளடக்கம் என்பது வெறும் கொள்கை இலக்காக மட்டும் நின்றுவிடாமல், அது நடைமுறை யதார்த்தமாக மாறும்.

இலங்கையின் புத்தாக்கப் பொருளாதாரத்திற்கு இதுவே அடித்தளமாக அமையப் போகிறது. இதன் மூலமே நிதியியல் தொழில்நுட்பம், மின்-வணிகம் மற்றும் டிஜிட்டல் அரச சேவைகளை சாத்தியமாக்க முடியும்.
செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் அவசியமாகும். இந்தத் தொழில்நுட்பம் மிக வேகமாக வணிகங்களை மாற்றியமைத்து வருவதோடு சிறிய குழுக்கள் கூட பெரிய நிறுவனங்களுடன் போட்டியிடும் ஆற்றலை வழங்குகின்றது.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |