ஜூன் மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த 695 மில்லியன் அமெரிக்க டொலர்!
வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல்கள் மூலம் இலங்கை கடந்த ஜூன் மாதத்தில் 695 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவானமாகப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய புள்ளி விவரங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த மே மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டு வருமானம் 847 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள்
இதன்படி, மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் வெளிநாட்டு பணவணுப்பல்கள் மூலம் பெறப்பட்ட வருமானமானது 152 மில்லியன் அமெரிக்க டொலர்களினால் கணிசமாகக் குறைந்துள்ளது.

இதேவேளை, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு வருமானம் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எனினும் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 23.2 சதவீத அதிகரிப்பைக் காட்டுகிறது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |