பாடசாலை கல்விச் செயற்பாடுகளில் புதிய மாற்றம்!
Ministry of Education
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Kalaimathy
இலங்கையில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென சிறிலங்காவின் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடுகளிலிருந்து அல்லது இணையவழி கற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், குறித்த திகதியினை ஒத்திவைப்பதற்கு சிறிலங்காவின் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி திறக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மரண அறிவித்தல்