பாடசாலை மாடியில் இருந்து விழுந்த 15 வயது மாணவி..!
கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றின் 15 வயது மாணவி ஒருவர் நேற்று (9) பாடசாலை கட்டிடத்திலிருந்து விழுந்து படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் சிறுமி, கட்டிடமொன்றின் முதல் மாடியில் இருந்து விழுந்த சிறுமி காயங்களுக்குள்ளான நிலையில் கண்டி பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முற்பகல் 11.30 அளவில் இடம்பெற்றதாகவும், மாணவி 15 அடி உயரத்தில் இருந்து விழுந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
CT ஸ்கேன் பரிசோதனை
குறித்த பாடசாலை மாணவி ஒரு மாணவர் தலைவர் எனவும், கட்டுகஸ்தோட்டை - களுகமுவ பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மாணவியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிய CT ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அதன் பின்னர் மேலதிக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
