இலங்கையில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் வெளிவந்த செய்தி
vaccine
corona
people
By Shalini
அடுத்த மாதத்திற்குள் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கினால், விரைவில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார்.
இதேவேளை, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கினால் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையை 90 சதவீதம் குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையில் நேற்றைய தினம் கொரோனாவினால் அதிக மரணங்கள் பதிவாகின. 101 என்ற மோசமான இறப்பு எண்ணிக்கை நாட்டில் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.