40 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இலங்கைக்கு வர கிடைத்த வாய்ப்பு
40 நாடுகளுக்கு ஆறு ஆண்டுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுற்றுலாவை மேம்படுத்துவது இன்றியமையாதது. அதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டம் திருத்தப்பட்டு, 40 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆறு மாதங்களுக்குப் பிறகு மறுஆய்வு
இந்த முறை ஆறு மாதங்களுக்குப் பிறகு மறுஆய்வு செய்யப்படும் என்றும், இதைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், பெலாரஸ், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, கஜகஸ்தான், குவைத், மலேசியா, நேபாளம், நெதர்லாந்து, நியூசிலாந்து, சுவீடன், பாகிஸ்தான், கத்தார், ரஷ்யா, சவூதி அரேபியா, தென் கொரியா, சுவிட்சர்லாந்து, துருக்கி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 40 நாடுகளுக்கு முப்பது நாள் இலவச சுற்றுலா விசாக்களை இது வழங்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இதைச் செயல்படுத்த நாங்கள் விரும்பவில்லை. எனவே, மின்னணு பயண அனுமதிகளை நாங்கள் கட்டாயமாக்கியுள்ளோம். அதன் மூலமாகவே விசாக்கள் பெறப்படும்,” என்றும் அமைச்சர் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |