தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்தை மக்கள் வீதியிலே அடித்து விரட்டாமல் வைத்திருப்பதே மிகப்பெரிய அர்ப்பணிப்பு!
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை குறித்து சுயாதீனமான முறையில் பக்கச் சார்பின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இரா.சாணக்கியனின் பெயரை பயன்படுத்தி குறித்த விடயம் தொடர்பாக பகிரப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்து இன்று ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள 'ஹபாயா' சர்ச்சை பற்றிய உண்மைத்தன்மை குறித்து சரிவர தெரியாமையினாலேயே தான் அதுகுறித்து இதுவரை பேசாமல் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் அவரது பெயரினை பயன்படுத்தி சில விசமிகள் இனங்களுக்கிடையில் பிரிவினையை வெளியிடும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இது குறித்து சுயாதீனமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அத்துடன், பெரும் சர்ச்சையாகியுள்ள ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி விவகாரத்தினை சுயலாப அரசியலுக்காக பயன்படுத்துவதனை கைவிட வேண்டும். இவ்வாறான பிரச்சனைகள் இரு சமூக இணக்கப்பாட்டுடன் தீர விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட வேண்டும் எனத் தெரித்துள்ளார்.
