சிறிலங்காவிற்கு மில்லியன் கணக்கான டொலர்களை வழங்கவுள்ள ஆசிய நிறுவனம்!
By Kalaimathy
சினோபார்ம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக செலவிடப்பட்ட தொகையை இலங்கைக்கு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இணங்கியுள்ளது.
மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமைக்கான 85 மில்லியன் டொலர்களை வழங்க இணங்கியுள்ளது.
கொள்முதல் நடைமுறையில் உள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் தேசிய தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் தட்டுப்பாடு நாட்டில் நிலவும் நிலையில் இந்த இணக்கத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
You may Like this
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி