நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி- வலி.வடக்கு உறுப்பினர்கள் பேரணி!
வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் துவிச்சக்கர வண்டி பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் தற்போது நாளுக்கு நாள் அதிகரிக்கும் எரிபொருள் விலையேற்றத்தை கண்டிக்கு முகமாகவே அவர்கள் இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை யேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மல்லாகத்திலிருந்து வலி.வடக்கு பிரதேச சபை வரை துவிச்சக்கர வண்டியில் பேரணியாகச் சென்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் தற்போதைய பொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வலி.வடக்கு பிரதேச சபையின் சகல பிரதேச சபை உறுப்பினர்களும் சைக்கிளில் பிரதேச சபை அமர்வுக்கு பேரணியாக சென்று எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் தென்னிலங்கையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு தற்போதைய அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் போராட்டம் மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.