குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவு யுவதிக்கு வடக்கில் அமோக வரவேற்பு!
பாகிஸ்தானில் குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கம் வென்ற கணேஸ் இந்துகாதேவிக்கு வவுனியாவிலும் மாங்குளத்தில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
18-01-2022 அன்று பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச் சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 25 வயதுக்குட்ப்பட்ட 50-55 கிலோகிராம் எடைப்பிரிவில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
கணேஸ் இந்துகாதேவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த போட்டியில் கணேஷ் இந்துகாதேவியுடன் இலங்கை அணி 7 தங்கம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கங்களை வெற்றி கொண்டு சம்பியனாக மகுடம் சூடியது. இவ்வாறான நிலையில் இலங்கை அணி நேற்று மாலை இலங்கையை வந்தடைந்திருந்தது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ள கணேஸ் இந்துகாதேவிக்கு இன்று காலை மாங்குளம் கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் அவரது வீடு திரும்பும் வழியில் அவருக்கு அமோக வரவேற்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த யுவதிக்கு பாகிஸ்தான் போட்டியில் கலந்துகொள்ள 105000 ரூபா நிதியினை ஏற்பாடு செய்து வழங்கிய தமிழ் விருட்ஷம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் ஏற்பாட்டில் இன்று காலை வவுனியாவில் வரவேற்ப்பளிக்கப்பட்டு வவுனியா கந்தசாமி கோயிலில் வழிபாட்டிலும் கலந்துகொண்டுள்ளார்.
இதனை தொடந்து மாங்குளம் நகருக்கு வருகை தந்த யுவதிக்கு மாங்குளம் மின்னொளி விளையாட்டுக்கழகத்தின் ஏற்ப்பாட்டில் பாரிய வரவேற்ப்பு பதாகை ஒன்று வைக்கப்பட்டு மகத்தான வரவேற்ப்பளிக்கப்பட்டது.
You May Like This