வடக்கு, கிழக்கில் கொட்டி தீர்த்த கன மழை: மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு

Sri Lankan Peoples Weather
By Kirupa Jan 08, 2024 01:39 PM GMT
Report

தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடாவிய ரீதியின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பெய்த மழை காரணமாக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்த நிலையில், இன்று பெய்யும் மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் பலவற்றில் மீண்டும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

தமிழர் தாயகமான கிழக்கில் கடந்த சில நாட்களாக ஒய்ந்திருந்த மழை, தற்போது மீண்டும் பெய்ய ஆரம்பித்துள்ளதால் மக்கள் அசௌரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பள உயர்வு: ரணிலுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பள உயர்வு: ரணிலுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை


வெள்ளப்பெருக்கு

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் தேங்கியிருந்த வெள்ள நீர் முற்றாக வழிந்தோடியுள்ள நிலையில், மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளமை கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு, கிழக்கில் கொட்டி தீர்த்த கன மழை: மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு | Sri Lanka Weather Effects North Western Province

ஏற்கனவே பெய்த மழை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ள போதிலும் இதுவரை எவரும் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை என ஐ.பி.சி தமிழுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகளும் பயிர் செய்கை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்கள் 

ஏற்கனவே பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் வீடுகளில் இருந்து வடியாத நிலையில், கடந்த மூன்று நாட்களின் பின்னர் மீண்டும் கடும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் கொட்டி தீர்த்த கன மழை: மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு | Sri Lanka Weather Effects North Western Province

மட்டக்களப்பு பழுகாமம், முனைத்தீவு, பட்டாபுரம், வேத்துச்சேனை, களுதாவளை, களுவாஞ்சிக்குடி, எருவில், செட்டிப்பாளையம், கிரான்குளம், ஆரையம்பதி, காத்தான்குடி, நாவற்குடா, செங்கலடி, ஏறாவூர், வந்தாறுமூலை, சித்தாண்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லரிப்பு பிரதேசத்திலும் வெள்ள நீர் வீடுகளுக்குள் உட்புகுந்ததினால் பாதிக்கப்பட்டவர்கள் இடைத் தங்கல் முகாம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சிலர் தமது கால் நடைகளை உயரமான இடங்களுக்கு கொண்டுசென்று பாதுகாப்பதற்காக தற்காலிக கொட்டில்களில் அடைத்து வைத்துள்ளனர்.

ஜே.வி.பியுடன் நேரடி விவாதமொன்றை முன்னெடுக்க தயார்: திலித் ஜயவீர சவால்

ஜே.வி.பியுடன் நேரடி விவாதமொன்றை முன்னெடுக்க தயார்: திலித் ஜயவீர சவால்


தாழ்நிலப் பகுதிகள்

மேலும், போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது, வயல் நிலங்களும் சிறுதோட்டப் பயிர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை கால் நடைகளும் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறிப்பிடுகின்றன.

வடக்கு, கிழக்கில் கொட்டி தீர்த்த கன மழை: மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு | Sri Lanka Weather Effects North Western Province

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச நிறுவனங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சமைத்த உணவுகள் மற்றும் ஏனைய உதவிகளை வழங்கிவருகின்றன.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் அதிகரித்துவருகின்றது.

இதன் அடிப்படையில் நீர்பாசத் திணைக்களமானது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி குளத்தின் நீர்மட்டத்தை குறைக்க தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் சமுத்திரத்தின் ஐந்து வான் கதவுகளும் 3.5 அடி திறக்கப்பட்டு நீரானது வௌியேற்றப்பட்டுவருகின்றது.

இதன்காரணமாக அம்பாறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இறக்கமாமம், அக்கரைப்பற்று, அட்டளைச்சேனை, ஆலையடிவேம்பு, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், சாந்தமருந்து, கல்முனை போன்ற பிரதேச செயலக் பிரிவுகளில் உள்ள தாழ்நிலப் பகுதிகள் ஆபத்தானவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே பிரதான கால்வாய்கள், ஆறுகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் கூறியுள்ளார்.

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடும் மழை பெய்வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நெற் செய்கை நிலங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், விவசாயிகள் பாரிய அழிவுகளை எதிர்நோக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு நோக்கிய பேரணியில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 7 பேர் விடுதலை..! யாழ். நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு நோக்கிய பேரணியில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 7 பேர் விடுதலை..! யாழ். நீதிமன்றம் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021