"சிங்களவர்களுக்கு விடுதலைப்புலிகள் என்றால் பயம்" - சாணக்கியன் (காணொளி)
சிங்களவர்களுக்கு விடுதலைப்புலிகள் என்றால் பயம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து எங்களுடைய மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் என்றால் பயம்
நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை பலவாறு தாக்கி பேசியுள்ளனர்.
அவர்களுக்கு இருக்கும் பிரச்சினை நான் சிங்கள மொழியில் பேசும் போது சிங்களவர்கள் மத்தியிலும் எனது கருத்து செல்கின்றது.
எனவே தமிழர்களுக்கு பிரச்சினை உள்ளதாக சிங்கள மக்கள் யோசிக்கும் போது, அது தங்களுக்கு பாதகமாக அமையும் என நினைக்கிறார்கள்.
சிங்கள மக்களை கொல்வதுதான் புலிகளின் நோக்கம் என அவர்கள் நினைக்கிறார்கள் மற்றும் சிங்களவர்களுக்கு விடுதலைபுலிகள் என்றால் பயம்.”என கூறியுள்ளார்.
