ஜூலை மாதத்தில் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணம் எவ்வளவு தெரியுமா..!
இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும் 541 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
முன்னர் டுவிட்டர் என்று அழைக்கப்பட்ட X இல் பதிவிட்ட அவர், ஜூலை மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களின் பணம் கடந்த ஆண்டை விட 78% அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "இலங்கையின் உலகளாவிய பணியாளர்களின் மொத்தப் பணம் 3363.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் பணம்
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2023 ஜூன் மாதத்தில் மொத்தமாக 476 மில்லியன் அமெரிக்க டொலர்களும், மே 2023 இல் 480 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஏப்ரல் மாதத்தில் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களும் பணியாளர்கள் அனுப்பிய பணத்தில் பதிவாகியுள்ளன.
2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கை வெளிநாட்டு ஊழியர்களின் பணம் ஜனவரியில் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், பெப்ரவரியில் 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், மார்ச் 2023 இல் 568.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)