இஸ்ரேல் மோதலில் சிக்கி காயமடைந்த இலங்கை பிரஜை: வெளியான அதிர்ச்சி தகவல்
இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது, காயமடைந்த இலங்கை பிரஜை, சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அவருக்கு அந்த நாட்டிலிருந்து எந்தவித நட்டஈடும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
ஜோர்தானுக்கு சுற்றுலா நுழைவுவிசைவில் சென்ற குறித்த நபர், அதன் பின்னர் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்கு சென்று பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
இதேவேளை, ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த இரண்டு இலங்கைப் பெண்கள் இஸ்ரேல் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
[OEDFSFX[
10,000 அமெரிக்க டொலர்கள்
எனவே யுத்த சூழ்நிலையில் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் செல்வதை தவிர்க்குமாறு இலங்கை தூதுவர் நிமல் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை இஸ்ரேலில் இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக அவசர நிலையை எதிர்நோக்கும் இலங்கை தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 10,000 அமெரிக்க டொலர்களை இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வழங்கியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போன இலங்கையர்கள்
மேலும், எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்கனவே நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக காமினி செனரத் யாப்பா கூறியுள்ளார்.

இதேவேளை, காணாமல் போன இரு இலங்கையர்கள் தொடர்பான சம்பவத்தைத் தவிர, வேறு எந்தச் சம்பவமும் இன்று வரை பதிவாகவில்லை என்றும், அவர்கள் காவலில் இருக்கிறார்களா அல்லது மரணித்துவிட்டார்களா என்பதை தூதரகத்தில் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என்றும்வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா மேலும் தெரிவித்துள்ளார்.