இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி மண்டபம் மீனவர்கள் வேலைநிறுத்தம்!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக கடற்தொழிலார்கள் 22 தமிழக கடற்தொழிலார்களை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்து மண்டபம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து 405 விசைப்படகுகளில் ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட கடற்தொழிலார்கள் கடந்த 21ஆம் திகதி காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அன்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது அப்போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடம் அந்தோணி பிரசாத் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும், அதிலிருந்த தேவராஜ், நடராஜன், நாகசாமி, சந்தியா, ஜிப்ரான் ஆகிய 5 கடற்தொழிலார்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த 3 விசைப்படகையும் அதிலிருந்த 17 கடற்தொழிலார்கள் என மொத்தமாக 4 விசைப்படகுகள் மற்றும் 22 கடற்தொழிலார்களை சிறைபிடித்து யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் ஜூலை 5 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.
30 ஆயிரம் பேர் வேலையிழப்பு

மீன்பிடி தடைக்காலம் நீங்கிய பின் தொழிலுக்குச் சென்ற முதல் வாரத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்தும், மண்டபம் கடற்தொழிலார்கள் 5 பேர் உட்பட 22 தமிழக கடற்தொழிலார்களை படகுடன் உடனடியாக விடுவிக்க கோரி மண்டபம் கோயில் வாடி வடக்கு மற்றும் தெற்கு கடற்தொழிலார்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட விசை படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுமார் 10 ஆயிரம் கடற்தொழிலார்களும் 20 ஆயிரம் மீன் பிடி சார்பு தொழிலாளர்களும் இன்று வேலையிழந்துள்ளனர்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 18 மணி நேரம் முன்