போரால் புலம்பெயர்ந்தவர் ரயில் மோதி பரிதாப மரணம்
இலங்கை தமிழ் அகதிக்கு நேர்ந்த துயரம்
போர் காரணமாக கடல் வழியே உயிரை பிடிக்க தப்பியோடி தமிழகத்தில் வாழ்ந்து வந்த இலங்கை தமிழ் அகதி ரயில்மோதி மரணமடைந்த துயரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புதன்கிழமை காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் முருகையா என அடையாளம் காணப்பட்ட 55 வயதுடைய இலங்கையின் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
32 ஆண்டுகளாக இந்தியாவில் அகதியாக வாழ்ந்து வருகிறார்.
கடந்த 32 ஆண்டுகளாக இந்தியாவில் அகதியாக வாழ்ந்து வருகிறார். இலங்கை உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில் 1990-ஆம் ஆண்டு தமிழகம் வந்தவர்.
இவர் ராமநாதபுரம் மாவட்டம் ஏகேஎஸ் தோப்பு பகுதியில் உள்ள மண்டபம் முகாமில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். ஜூலை 6, புதன்கிழமை காலை, மண்டபம் கேம்ப் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, காலை 8.30 மணியளவில் ரயிலில் அடிபட்டார்.
ராமேஸ்வரம் ரயில்வே காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றினர். இது விபத்தா அல்லது தற்கொலையா என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.