உண்ணாவிரதம் இருந்த ஈழத்தமிழ் அகதிகள்: கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
Tamil nadu
Government Of India
India
By Kiruththikan
திருச்சி தமிழ்நாடு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய கோரி நீரை மட்டும் அருந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 17 இலங்கை தமிழர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் திருச்சி அரசு மருத்து மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய தமிழ் நாடு திருச்சி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் சிறப்பு முகாமில் தம்மை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக் கொலை செய்யுங்கள் என நீரை மட்டும் அருந்தி 17 இலங்கை தமிழர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், குறித்த தடுப்பு முகாமில் உள்ள 104 ஈழ தமிழ் அகதிகளும் தம்மை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணை கொலை செய்யுங்கள் எனவும் தமது உடல் உறுப்புக்களை தமிழ் நாட்டு உறவுகளுக்கு தானம் வழங்குவதாகவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.