சென்னையில் கைதான இலங்கைப் பெண் : முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பெண் நேற்று முன்தினம் (23) இலங்கை வருவதற்கு முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இலங்கை வருவதற்காக முயன்ற குறித்த பெண்ணின் கடவுச்சீட்டை விமான நிலையத்தில், வெளிநாட்டவர் பதிவு அலுவலக அலுவலர் ஆய்வு செய்தார்.
மத்திய குற்றப்பிரிவு காவல்துறை
அப்போது, அந்தப் பெண் கடந்த 2001ம் ஆண்டு இலங்கை கடவுச்சீட்டு மூலம் இந்தியா வந்தது தெரியவந்ததுடன் தற்போது இந்திய குடியுரிமை பெற்ற பெண் போல் இந்திய கடவுச்சீட்டு மூலம் மீண்டும் இலங்கைக்கு செல்ல முயன்றதும் தெரியவந்தது.

அதை தொடர்ந்து வெளிநாட்டவர் பதிவு அலுவலக அலுவலர் அந்தப் பெண்ணை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதன்படி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, அவர் இலங்கையை சேர்ந்த 58 வயதான மெரினா ஆனி என்றும், கடந்த 2001ம் ஆண்டு இலங்கை கடவுச்சீட்டு மூலம் இந்தியா வந்ததும், அதன் பிறகு குவைத் சென்று பின்னர் 2003ம் ஆண்டு விருதுநகரை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு மீண்டும் இந்தியா வந்து விருதுநகரில் குடியேரியதும் தெரியவந்தது.
இந்தியக் குடியுரிமை
பின்னர் மெரினா ஆனி தான் இந்திய குடியுரிமை பெண் போல் இந்திய ஆவணங்களான ஆதார் அட்டை, வங்கி அட்டை, வாக்காளர் அடையாள அட்டை பெற்று, தன்னை இலங்கை பெண் என்பதை மறைத்து இந்திய கடவுச்சீட்டு பெற்று சொந்த நாட்டிற்கு செல்ல முயன்றது தெரியவந்தது.

அதைதொடர்ந்து காவல்துறையினர் மெரினா ஆனியை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து இந்திய நாட்டின அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்