உத்தரபிரதேச ஹோட்டலொன்றில் சடலமாக கிடந்த இலங்கை பெண்
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் 71 வயது இலங்கை பெண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த பெண் சுனில் சாந்தி டி சில்வா என்பவரின் மனைவி கொக்கொட என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இலங்கையைச் சேர்ந்த 46 சுற்றுலாப் பயணிகள் குழு மாநிலத்தில் உள்ள ஷ்ரவஸ்தியில் உள்ள புத்த மத தலத்தைப் பார்வையிட சென்றுள்ளனர்.
காவல்துறையினருக்கு அறிவிப்பு
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை, கொக்கொட தனது அறையை விட்டு வெளியே வராததால், சுற்றுலாப் பயணிகள், ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன் கதவைத் திறந்து, அவரின் சடலத்தை அவதானித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, ஹோட்டல் ஊழியர்கள் மேலாளரை அழைத்து, சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு அறிவித்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை
இதேவேளை, பெண்ணின் மரணம் குறித்து தகவல் கிடைத்தவுடன் இலங்கை தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை சாதாரணமாக இருந்தாகவும் உடலை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு வசதியாக தூதரகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இது குறித்து எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை எனவும் இறந்த பெண்ணுடன் வந்த இலங்கை சுற்றுலாப் பயணி உடலைத் திரும்ப எடுத்துச் சென்றுவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.