பிரித்தானிய தீவில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் -சேகரிக்கப்படும் தகவல்கள்
பிரித்தானியாவுக்கு அருகிலுள்ள டியாகோ கர்சியா தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றுடன் தொடர்ச்சியாக தொடர்புகொண்டு தகவல்களைக் கேட்டறிந்து வருவதாக குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சு குறித்த இலங்கையர்களுக்கு தமது விருப்பத்தின் அடிப்படையில் நாடு திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
20 மாதங்களுக்கும் மேலாக நிர்க்கதி
20 மாதங்களுக்கும் மேலாக தீவில் தங்கியுள்ள 89 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நிர்க்கதிக்குள்ளாகினர் என்றும் கொவிட்- 19 பெருந்தொற்று பரவிய காலப்பகுதியில் பிரித்தானிய இராணுவ வீரர்களை தனிமைப்படுத்துவதற்காக கட்டப்பட்ட தற்காலிக கூடாரங்களிலேயே அவர்கள் தங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரித்தானிய காவல்துறையினர் கவனம்
இவர்கள் தொடர்பான சட்ட
நடவடிக்கைகளில் பிரித்தானிய
காவல்துறையினர் தற்போது கவனம்
செலுத்தியுள்ளதாக பிபிசி
தெரிவித்துள்ளது.
