வடக்கில் பெருமளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரை மீறியும் பாரிய போதைப்பொருள் கடத்தல்!

Sri Lanka Army Suresh Premachandran Sri Lanka
By Kalaimathy Oct 14, 2022 12:32 PM GMT
Report

நாட்டுக்குள் போதைப்பொருள் எவ்வாறு வருகின்றது, இராணுவமும், காவல்துறையினரும் புலனாய்வு அமைப்புகளும் கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது, என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண இளைஞர் சமூகத்தை பாதிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலமும் அரச பாதுகாப்புப் படையினரால் பாதுகாக்கப்பட்டுள்ள வட மாகாணத்தில் எவ்வாறு போதைப்பொருள் கடத்தல் இடம்பெற்று வருகின்றது.

வடக்கில் அதிகரித்த போதைப்பொருள் பாவனை

வடக்கில் பெருமளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரை மீறியும் பாரிய போதைப்பொருள் கடத்தல்! | Sri Lannka Government Army Drug Jaffna Northern Sl

இதேவேளை கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு கூட மக்கள் அச்சப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். மூன்று மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பாவனையால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

போதைப்பொருள் பாவனையினால் நோய்வாய்ப்பட்ட சுமார் 140 பேர் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையின் விசேட பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ள தனது 15 வயது மகன் தனக்கு வேண்டாம் என சுன்னாகத்தில் உள்ள தாய் ஒருவர் காவல்துறையினருக்கு கடிதம் எழுதியதையடுத்து, சிறுவன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அச்சுவேலி புனர்வாழ்வு பாடசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவதானம் செலுத்தாத புலனாய்வு பிரிவு

வடக்கில் பெருமளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரை மீறியும் பாரிய போதைப்பொருள் கடத்தல்! | Sri Lannka Government Army Drug Jaffna Northern Sl

பத்து பேருக்கு ஒரு சிப்பாய் என வடக்கில் பெரும் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருள் கடத்தல் மிகவும் ஆபத்தான முறையில் பரவி வருகின்றது.

யாராவது தகவல் கொடுத்தால், கடத்தல்காரர்களுக்கு அதைச் செய்தது யார் என்ற தகவல் மிக விரைவாகக் கிடைக்கிறது. அது எப்படி இடம்பெறுகிறது என எங்களுக்குத் தெரியாது.

இந்த விடயத்தில் காவல்துறையினரும் இராணுவ புலனாய்வு அமைப்புகளும் உரிய கவனம் செலுத்தாதது ஏன்? போதைக்கு அடிமையான இளைஞர்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை கொடுத்து அவற்றை வாங்க ஆசைப்படுகிறார்கள்.

அதனால் தான் திருட்டு, கொள்ளைகள் அதிகரித்துள்ளன. போதைப்பொருள் விநியோகம், விற்பனை மற்றும் பாவனைக்கு எதிராக வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பில் ஊடகங்கள் ஊடாக தொடர்ச்சியாக தெளிவுபடுத்தப்படுமானால், இளைஞர்களை ஓரளவுக்கு இந்த அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற முடியும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016