இனப்பிரச்சினை இல்லையென காண்பிக்க முனையும் சிறிலங்கா அரசாங்கம் - சிறீதரன் குற்றச்சாட்டு
இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை எனவும் பொருளாதாரப் பிரச்சினையே உள்ளதாகவும் காண்பிக்கும் முயற்சிகளை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஆளும் தரப்பினர் முன்னெடுப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அங்கீகரிப்பதற்கு சர்வதேசம் தாமதம் காட்டுகின்றமை தொடர்பாகவும் கிளிநொச்சியில் இன்று(15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது கரிசனையை முன்வைத்துள்ளார்.
திறந்தவெளிச் சிறைச்சாலையில் தமிழர்கள்

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், பௌத்த இனவாதிகள் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எந்த வகையிலும் விரும்பத் தகாதவர்கள்.
யுத்தம் முடிவடைந்து 13 வருடம் கடந்த நிலையிலும் எந்த ஒரு பௌத்த அரசியல்வாதியும் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத்தராது, நாட்டில் பெளத்தர்களின் அபிலாசைகளை தனியாகவும் தமிழர்களின் அபிலாசைகளை தனியகவும் இருப்பதாகவே நினைக்கின்றனர்.
நாடு ஒரு தீவுக்குள் இருந்தாலும் இரு நாடுபோலவே செயற்படுகின்றார்கள்.
தமிழர்கள் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்வதாகவும், பெளத்தர்கள் சுதந்திரமாக வாழ்வதாகவும் எண்ணுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.