இலங்கையில் நாளை மின்சாரத்தடை இல்லை!
இலங்கையின் நாளை (10) மின்சார விநியோகத்தில் தடை இருக்காது என்று மின்சார சபை அறிவித்துள்ளது.
சப்புகஸ்கந்த மின்நிலையம் மற்றும் கொழும்பு துறை மின்சார நிலையங்களுக்கு சுமார் 2500 மெற்றிக்தொன் உலை எண்ணெய்யை விநியோகிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கிமையை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மின்சாரசபை பெருந்தொகையான நிலுவைக் கொடுப்பனவையும் செலுத்தவேண்டியுள்ள நிலையிலேயே பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உலை எண்ணெய்யை விநியோகிக்க இணங்கியுள்ளது.
எனினும் இந்த உலை எண்ணெய் விநியோகம் இடம்பெறாதவிடத்து, நாட்டில் இரண்டரை மணித்தியால மின்சார விநியோகத் தடை மேற்கொள்ளப்படலாம் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நிலையில் வெளியானது ஐ.நாவின் வலுவான அறிக்கை! 2 நாட்கள் முன்

ஒன்பதாந் திகதியைக் கடந்தார் ரணில்...!
4 நாட்கள் முன்