சிகப்பு பட்டியலில் இலங்கை - அரசாங்கம் எடுத்துள்ள புதிய முயற்சி
கொவிட்-19 சம்பந்தமாக இலங்கையை சிகப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகளில், அந்த பட்டியலில் இருந்து நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சுடன் அடுத்த சில வாரங்கிளல் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
குவைத், ஐக்கிய அரபு ராஜ்ஜியம், லாவோஸ், கத்தார், மலேசியா, மியன்மார், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இங்கிலாந்து, போத்துக்கல், இத்தாலி, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, நோர்வே, பஹ்ரேன்,நேபாளம், ஜப்பான், வியட்நாம், பிரான்ஸ், நியூசிலாந்து ஆகிய நாடுகள் இலங்கையை சிகப்பு பட்டியலில் சேர்த்துள்ளதுடன் இந்த நாடுகளுக்கு இலங்கையில் இருந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்நாடுகளும் கொவிட் சட்டத்திட்டங்களுக்கு அமைய பல்வேறு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இந்த பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது சம்பந்தமாக அந்நாடுகளை சேர்ந்த இலங்கைக்கான தூதுவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகபிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வெளிநாடுகளுக்கு தொழில் மற்றும் கல்வி கற்க செல்ல எதிர்பாரத்துள்ள இலங்கையை சேர்ந்தவர், கொரோனா தொற்று நோய் நிலைமையில் வெளிநாடு செல்ல காணப்படும் தடையை நீக்க சம்பந்தப்பட்ட நாடுகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கல்வி கற்க வெளிநாடு செல்லும் மாணவர்கள் இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கமைய செயற்பட்டு, மாணவர்கள் வெளிநாடு செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.