உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மூடி மறைக்கும் உயரதிகாரிகள்- பேராயர் குற்றச்சாட்டு!
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 30 மாதங்கள் கடந்துள்ள போதிலும் தகாக்குதலின் சூத்திரதாரி யார் என இதுவரையில் இனங்காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற விஷேட ஆராதனையில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு பரிந்துரைகளை தற்போதைய ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்துவதில்லை என தெளிவாகியுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாதுகாப்பு பிரிவில் உள்ள உயர் அதிகாரிகள் விசாரணைகளை மூடி மறைக்க முயற்சிப்பதாவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.