கபில சந்திரசேனவின் மரணத்தில் சந்தேகம்...! களத்தில் கோட்டை நீதவான்
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் சந்தேகத்திற்குரியது என கோட்டை நீதவானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, மரணம் தொடர்பில் தடயவியல் நிபுணரால் பிரேதப் பரிசோதனை தேவை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
நீதவான் விசாரணை
கொள்ளுப்பிட்டி, பெட்ரிஸ் பிளேஸ், எண் 38 இல் உள்ள அவரது இல்லத்தில் கபில சந்திரசேன தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் தகவல் வழங்கிய நிலையில் குறித்த இடத்திற்குக் கோட்டை நீதவான் விசாரணைக்குப் புறப்பட்டுச் சென்றதால் வழக்கு ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரேதப் பரிசோதனை அதிகாரியும் SOCO அதிகாரிகளும் மரணம் நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டதாகக் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் போது இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |