மற்றுமொரு தூதுவரும் பதவி விலகினார்
colombo
resigned
another ambassador
By Sumithiran
வெளிநாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் தொடர்ச்சியாக பதவி விலகி வரும் நிலையில் மற்றுமொரு தூதுவரும் பதவி விலகியதுடன் நாட்டிற்கும் திரும்பியுள்ளார்.
இதன்படி மியன்மாருக்கான இலங்கைத் தூதவராகப் பதவிவகித்த பேராசிரியர் நளிந்த டி சில்வா தனது தூதுவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறு பதவி விலகிய அவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை நாடு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்சமயம் அவர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றார்.
இதேவேளை அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதவராக 9 மாதங்களாக கடமையாற்றிய பிரபல இராஜதந்திரி ரவிநாத ஆரியசிங்க அண்மையில் இராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்