யாழில் எரிபொருள் வரிசையில் உள்ள உந்துருளிகளின் உதிரிப்பாகங்கள் திருட்டு (படம்)
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் விடப்படும் உந்துருளிகளில் இருந்து அதன் உதிரிப் பாகங்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருள் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் நேற்றைய தினம் (29) இரவு வரிசையில் விடப்பட்ட உந்துருளி ஒன்றின் முன் பகுதியின் பாகம் களவாடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் விடப்பட்ட "ஜப்பான் 200" ரக உந்துருளியின் ஒரு பக்க பாகம் களவாடப்பட்டு இருந்தது. அதன் பெறுமதி 12 ஆயிரத்திற்கும் அதிகம் என உரிமையாளர் தெரிவித்து இருந்தார்.
உதிரிப் பாகத் திருட்டு
இவ்வாறாக இரவு வேளைகளில் வரிசைகளில் விடப்படும் உந்துருளிகளின் பக்க கண்ணாடிகள், சமிஞ்சைகள் உள்ளிட்ட பல உதிரிப்பாகங்கள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.