அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்படாத செம்மணி புதைகுழி விவகாரம்
செம்மணி மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகள் நிபுணத்துவம் வாய்ந்த பிரபலமான பல்கலைக்கழகங்களுக்கு அல்லது பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் எனக் கூறி ஒருவருடம் ஆகின்ற போதும் அவை இன்னமும் அனுப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் சில முறைப்பாடுகளும் வெளியாகியுள்ளன.
இலங்கையில் அதிக எண்ணிக்கையான என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனிதப் புதைகுழியாக செம்மணி மனிதப் புதைகுழி உருவெடுத்துள்ளது.
அதிக என்புத் தொகுதிகள்
இதற்கு முன்னர் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதோச மனித புதைகுழியில் 376 மனித என்புத் தொகுதிகள் அகழந்து எடுக்கப்பட்டிருந்தன.

தற்போது அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகளையும் அதிகூடிய நிபுணத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் அல்லது பரிசோதனை கூடங்களில் அறியத்தர வேண்டும் என முன்னதாக கோரப்பட்டது. அதற்கான உத்தரவுகளையும் நீதிமன்றம் வழங்கியிருந்தது.
என்புத் தொகுதிகளை அகழ்ந்து எடுப்பது என்பது ஒரு ஆரம்பகட்ட விடயம். ஆனால் அதனை விட பிரதானமானது அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகள் யாருடையது என்பதை அடையாளம் காண்பது உள்ளிட்ட என்புத் தொகுதிகளை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் இன்னமும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |