பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் : கடுமையாக சாடிய எம்.பி

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Current Political Scenario
By Shalini Balachandran Dec 05, 2024 12:37 AM GMT
Report

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் 1979 இல் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் அதி பயங்கரமானது, அது ஜனநாயகத்துக்கும் அடிப்படை உரிமைக்கும் எதிரானது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuthu Srinesan) தெரிவித்துள்ளார்.

பயங்கவாத தடைச்சட்ட நீக்கப்படுவது தொடர்பில் கடந்த ஆட்சிக்காலங்களிலிருந்து பேசப்பட்டு வரப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் அவரிடம் தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாதி தேங்காய் ஒன்றின் விலை எவ்வளவு தெரியுமா...!

இலங்கையில் பாதி தேங்காய் ஒன்றின் விலை எவ்வளவு தெரியுமா...!

அப்பாவி மக்கள் 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பயங்கரவாத தடைச்சட்டம் பயங்கரமானது அது பல அப்பாவி மக்களை குற்றவாளிகளாக்கியது, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியது, அப்பாவிகளின் உயிர்களையும் குடித்தது.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் : கடுமையாக சாடிய எம்.பி | Srinesan Opinion On Prevention Of Terrorism Act

அப்பாவிகளைக் குற்றவாளிகளாக்குவதற்காக சித்திரவதைகள் மூலமாக ஒப்புதல் வாக்கு மூலத்தைப் பெறுவதற்கு உதவியது பல தமிழர்களை நடைப் பிணங்களாக மாற்றியது.

மனிதகுலம் வெட்கித் தலை குனியக் கூடிய அனைத்துக் கொடூரங்களையும் அச்சட்டம் செய்தது இப்படியான கொடூரச் சட்டம் தற்காலிகமாகவே கொண்டு வரப்பட்டது. ஆனால் 45 ஆண்டுகளாக நிலையாக நிற்கின்றது.

மகிந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மரணம் : அநுர தரப்புக்கு கிடைத்த முக்கிய ஆதாரம்

மகிந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மரணம் : அநுர தரப்புக்கு கிடைத்த முக்கிய ஆதாரம்

இடையிலான வேறுபாடு

யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகளாகியும் அந்த சட்டத்தை நீக்க அதிகாரவர்க்கத்தால் முடியவில்லை அண்மையில், ஆட்சிப்பீடமேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப் போவதாக தேர்தல் பிரசாரங்களின் போது கூறியது.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் : கடுமையாக சாடிய எம்.பி | Srinesan Opinion On Prevention Of Terrorism Act

அதனைச் செய்வதன் மூலமாக இலங்கையின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இந்த அரசாங்கத்திற்கு உள்ளது அதனைச் செய்யாது தவிர்த்தால் பச்சை, நீலக் கட்சிகளின் பாதைகளில் பயணிக்கும் கட்சியாகவே சிவப்புக்கட்சியும் அமைந்துவிடும்.

அதாவது ஐக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி,பொதுஜன பெரமுன போன்ற கட்சிகளுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

கனடாவில் மருத்துவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் மருத்துவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பயங்கரவாதத் தடைச்சட்டம் 

இதனை உணர்ந்து தேசியமக்கள் சக்தி செயற்பட வேண்டும் அத்தோடு பயங்கரவாத தடைச்சட்டத்தால் நாடு அழிவுப்பாதையை நோக்கியே சென்றது இதனை தேசிய மக்கள் சக்தி புரியாது விட்டால், நாட்டுக்கு எதிர்காலம் இல்லை.

பயங்கரவாதத் தடைச்சட்டம் ஜேவிபியினரின் உயிர்களையும் குடித்திருந்தது என்பதை தேசிய மக்கள் சக்தி நன்கறியும் அத்தோடு அதிகார இருப்பால் அதனை மறக்க முடியாது.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் : கடுமையாக சாடிய எம்.பி | Srinesan Opinion On Prevention Of Terrorism Act

மறைந்த உறவுகளையும் நினைவேந்தத் தடுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் அடிப்படை உரிமைக்கு விரோதமானதாகும் அண்மையில் நினைவேந்தல் செயலால் மூன்று தமிழர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டமை கண்டனத்திற்குரிய விடயமாகும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாதையில் சறுக்கல் ஏற்படக்கூடாது கைதானவர்கள் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் உர மானியம் குறித்து அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம்

விவசாயிகளின் உர மானியம் குறித்து அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்